கோவை : மாதவிடாய் சுகாதார தினத்தை முன்னிட்டு கோவையில் பெண்கள் மற்றும் இளம் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
கோவை : மாதவிடாய் சுகாதார தினத்தை முன்னிட்டு கோவையில் பெண்கள் மற்றும் இளம் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

உலகளவில் மாதவிடாய் காலங்களின் போது பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கடந்த 2014-ம் ஆண்டு முதல் மே 28-ம் தேதி மாதவிடாய் சுகாதார தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த தினத்தையொட்டி, டி.என்.யு.எஸ்.எஸ்.பி.யின் தொழில்நுட்ப ஆதரவு பிரிவு மற்றும் கீ ஸ்டோன் அறக்கட்டளையின் சார்பில் பெரியநாயக்கன் பாளையம் மற்றும் நரசிம்ம நாயக்கன் பாளையம் பகுதிகளில் உள்ள குடிசை குடியிருப்பு பகுதிகளில் பெண்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இதில், கற்பகம் அறக்கட்டளை மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர், பெண்கள் மற்றும் இளம் பெண்களுக்கு மாதவிடாய் கால சுகாதாரம் பற்றிய அறிவுரை வழங்கினர்.


உலகளவில் மாதவிடாய் காலங்களின் போது பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கடந்த 2014-ம் ஆண்டு முதல் மே 28-ம் தேதி மாதவிடாய் சுகாதார தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த தினத்தையொட்டி, டி.என்.யு.எஸ்.எஸ்.பி.யின் தொழில்நுட்ப ஆதரவு பிரிவு மற்றும் கீ ஸ்டோன் அறக்கட்டளையின் சார்பில் பெரியநாயக்கன் பாளையம் மற்றும் நரசிம்ம நாயக்கன் பாளையம் பகுதிகளில் உள்ள குடிசை குடியிருப்பு பகுதிகளில் பெண்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இதில், கற்பகம் அறக்கட்டளை மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர், பெண்கள் மற்றும் இளம் பெண்களுக்கு மாதவிடாய் கால சுகாதாரம் பற்றிய அறிவுரை வழங்கினர்.
