ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பு கோவையில் மேலும் 11 பேரிடம் விசாரணை


கோவை உக்கடத்தில் ஐ.எஸ் .ஐ.எஸ் இயக்க ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் NIA அமைப்பினர் உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்த நவாஸ், நவாஸ்கான், உபைதுல் ரஹ்மான்,நபியுல்லா மற்றும் அபுதாகீர் ஆகிய 5 பேரிடம்  மூன்றாவது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். NIA எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினர் 3 குழுக்களாக இவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் இன்று மேலும் மூவரை கமிஷ்னர் அலுவலகத்திற்கு அழைத்து வந்த NIA அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 8 பேரிடமும் தனித்தனியாக விசாரணையானது நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இவர்கள் 8பேரின் பாஸ்போட் ஆவணங்களையும் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.கேரளாவில் கைதான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த அபுபசீர் என்பவருடன் முகநூலில் இந்த இளைஞர்களுக்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை மேற்கொண்டு வரும் அதிகாரிகள், முகநூலில் இவர்கள் இடையே நடந்த உரையாடல்களை கைப்பற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

கோவை கமிஷ்னர் அலுவலகத்தை தவிர ரகசிய இடத்தில் வைத்து மேலும் மூன்று இளைஞகளிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கோவையில் மட்டும் மொத்தம் 11 பேரிடம் விசாரணை நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஆனால் இதுவரை நடந்த விசாரணையில் முக்கியதகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே இவர்கள் மீதான நடவடிக்கை இருக்கும் என NIA அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...