நீலகிரி : குன்னூர் - மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் அதிகளவில் பலாப் பழங்கள் காய்த்துள்ளதால், இதனை உண்பதற்காக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதன் காரணமாக அந்த வழியாக வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி : குன்னூர் - மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் அதிகளவில் பலாப் பழங்கள் காய்த்துள்ளதால், இதனை உண்பதற்காக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதன் காரணமாக அந்த வழியாக வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குன்னூர் மேட்டுப்பாளையம் இடையேயான வனப்பகுதி மற்றும் அதனையொட்டியுள்ள தனியார் தோட்டங்களில் பலாப் பழங்கள் அதிகளவு காய்த்துள்ளதால், உணவிற்காக இப்பகுதியில் யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளன. இதன் காரணமாக, குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியார், குரும்பா கிராமம், நஞ்சப்ப சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இப்பகுதிகளில் உள்ள தாழ்வான மரங்களில் இருக்கும் பலாப் பழங்களை உண்பதற்காக, யானைகள் வந்து செல்வதால், இங்குள்ள குடியிருப்புவாசிகள், பள்ளி மாணவ, மாணவியர்கள் என பலரும் அச்சமடைந்துள்ளனர்.

இந்த சாலையில் போக்குவரத்து அதிகம் உள்ள நிலையில், யானைகள் அவ்வப்போது ரயில் தண்டவாளம் மற்றும் சாலைகளுக்கு வந்து செல்ல வாய்ப்பிருப்பதால், குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் வாகனங்களில் பயணிப்போர் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குன்னூர் மேட்டுப்பாளையம் இடையேயான வனப்பகுதி மற்றும் அதனையொட்டியுள்ள தனியார் தோட்டங்களில் பலாப் பழங்கள் அதிகளவு காய்த்துள்ளதால், உணவிற்காக இப்பகுதியில் யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளன. இதன் காரணமாக, குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியார், குரும்பா கிராமம், நஞ்சப்ப சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இப்பகுதிகளில் உள்ள தாழ்வான மரங்களில் இருக்கும் பலாப் பழங்களை உண்பதற்காக, யானைகள் வந்து செல்வதால், இங்குள்ள குடியிருப்புவாசிகள், பள்ளி மாணவ, மாணவியர்கள் என பலரும் அச்சமடைந்துள்ளனர்.

இந்த சாலையில் போக்குவரத்து அதிகம் உள்ள நிலையில், யானைகள் அவ்வப்போது ரயில் தண்டவாளம் மற்றும் சாலைகளுக்கு வந்து செல்ல வாய்ப்பிருப்பதால், குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் வாகனங்களில் பயணிப்போர் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.