நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற கோடை விழாவைக் கண்டு ரசிக்க கடந்த 3 நாட்களில் உதகைக்கு சுமார் 60 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற கோடை விழாவைக் கண்டு ரசிக்க கடந்த 3 நாட்களில் உதகைக்கு சுமார் 60 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

உதகை மக்களவை தேர்தலையொட்டி, நடப்பாண்டு கோடை விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மலர் கண்காட்சி, பழக்கண்காட்சி மட்டுமே நடத்தப்பட்டது. உதகை மலர் கண்காட்சிக்கு, சுமார் 1.60 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர். அவ்வப்போது, பெய்து வரும் மழைக்கு இதமான காலநிலையை, சுற்றுலாப் பயணிகள் ரசிக்க முடிந்தது. கடந்த 3 நாட்களில் உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கு, சுமார் 60 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். ரோஜா பூங்கா, படகு இல்லம், சூட்டிங் மட்டம், பைக்காரா படகு சவாரி பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

உதகை நகரில் பேருந்து நிறுத்தம் முதல் குன்னூர் சந்திப்பு சாலை, தாவரவியல் பூங்கா, மதுவானா சந்திப்பு, பிங்கர்போஸ்ட், படகு இல்லம் சாலைகளில் ஏற்பட்ட வாகன நெரிசலால் சுற்றுலா வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். நெரிசலால் குறிப்பிட்ட நேரத்திற்கு சுற்றுலா ஸ்தலங்களுக்கு செல்ல முடியாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

உதகை மக்களவை தேர்தலையொட்டி, நடப்பாண்டு கோடை விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மலர் கண்காட்சி, பழக்கண்காட்சி மட்டுமே நடத்தப்பட்டது. உதகை மலர் கண்காட்சிக்கு, சுமார் 1.60 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர். அவ்வப்போது, பெய்து வரும் மழைக்கு இதமான காலநிலையை, சுற்றுலாப் பயணிகள் ரசிக்க முடிந்தது. கடந்த 3 நாட்களில் உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கு, சுமார் 60 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். ரோஜா பூங்கா, படகு இல்லம், சூட்டிங் மட்டம், பைக்காரா படகு சவாரி பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

உதகை நகரில் பேருந்து நிறுத்தம் முதல் குன்னூர் சந்திப்பு சாலை, தாவரவியல் பூங்கா, மதுவானா சந்திப்பு, பிங்கர்போஸ்ட், படகு இல்லம் சாலைகளில் ஏற்பட்ட வாகன நெரிசலால் சுற்றுலா வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். நெரிசலால் குறிப்பிட்ட நேரத்திற்கு சுற்றுலா ஸ்தலங்களுக்கு செல்ல முடியாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.