மனைவி, குழந்தைகளுடன் சேர்த்து வைக்கக்கோரி பூச்சி மருந்து அருந்தியதாக கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நாடகமாடிய இளைஞரால் பரபரப்பு

கோவை : தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்த்து வைக்கக்கோரி மனு அளிக்க வந்த இளைஞர் பூச்சி மருந்து அருந்துவிட்டதாகாகக் கூறி நாடகமாடிய சம்பவம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை : தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்த்து வைக்கக்கோரி மனு அளிக்க வந்த இளைஞர் பூச்சி மருந்து அருந்துவிட்டதாகாகக் கூறி நாடகமாடிய சம்பவம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் அப்சல் (38). புலியகுளம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஸ்டோர் கீப்பராக பணியாற்றி வருகிறார். தேர்தல் நடைமுறைகளுக்கு பின் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு, இன்று மீண்டும் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அங்கு வந்த அப்சல் தனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தன்னுடன் சேர்ந்து வாழ மறுப்பதால், அவர்களுடன் சேர்த்து வைக்கக்கோரி பூச்சி மருந்து குடித்து விட்டதாகக் கூறி உள்ளார். இந்த தகவல் அறிந்த போலீசார், அவரை உடனடியாக அரசு மருத்துமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அப்சலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் விஷம் அருந்தவில்லை என தெரிந்து அவரை திருப்பி அனுப்பினர். பின்னர், அங்கிருந்து வந்த அப்சல் மாவட்ட ஆட்சியரிடம் தனது மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து வாழ வழிவகை செய்ய வேண்டும் என கோரி மனு அளித்தார். தேர்தல் விதிமுறைகளுக்கு பின்னர் மனுக்கள் பெறப்படும் முதல் நாளில் விஷம் அருந்தியதாக நாடகமாடிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. 

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...