மனைவி, குழந்தைகளுடன் சேர்த்து வைக்கக்கோரி பூச்சி மருந்து அருந்தியதாக கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நாடகமாடிய இளைஞரால் பரபரப்பு

கோவை : தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்த்து வைக்கக்கோரி மனு அளிக்க வந்த இளைஞர் பூச்சி மருந்து அருந்துவிட்டதாகாகக் கூறி நாடகமாடிய சம்பவம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை : தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்த்து வைக்கக்கோரி மனு அளிக்க வந்த இளைஞர் பூச்சி மருந்து அருந்துவிட்டதாகாகக் கூறி நாடகமாடிய சம்பவம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் அப்சல் (38). புலியகுளம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஸ்டோர் கீப்பராக பணியாற்றி வருகிறார். தேர்தல் நடைமுறைகளுக்கு பின் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு, இன்று மீண்டும் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அங்கு வந்த அப்சல் தனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தன்னுடன் சேர்ந்து வாழ மறுப்பதால், அவர்களுடன் சேர்த்து வைக்கக்கோரி பூச்சி மருந்து குடித்து விட்டதாகக் கூறி உள்ளார். இந்த தகவல் அறிந்த போலீசார், அவரை உடனடியாக அரசு மருத்துமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அப்சலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் விஷம் அருந்தவில்லை என தெரிந்து அவரை திருப்பி அனுப்பினர். பின்னர், அங்கிருந்து வந்த அப்சல் மாவட்ட ஆட்சியரிடம் தனது மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து வாழ வழிவகை செய்ய வேண்டும் என கோரி மனு அளித்தார். தேர்தல் விதிமுறைகளுக்கு பின்னர் மனுக்கள் பெறப்படும் முதல் நாளில் விஷம் அருந்தியதாக நாடகமாடிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. 

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...