குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெற்ற 2 நாள் பழக்கண்காட்சி நிறைவு

நீலகிரி : குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நேற்று நடைபெற்ற பழக்கண்காட்சியின் இறுதி நாளில், சிறந்த பழங்களை காட்சிப்படுத்தியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


நீலகிரி : குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நேற்று நடைபெற்ற பழக்கண்காட்சியின் இறுதி நாளில், சிறந்த பழங்களை காட்சிப்படுத்தியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



நீலகிரி மாவட்டத்தில் சீசனை முன்னிட்டு நடத்தப்படும் கோடை விழாவின் கடைசி நிகழ்ச்சியாக குன்னூர் சிம்ஸ்பூங்காவில் 61-வது பழக்கண்காட்சி சனிக்கிழமை சிம்ஸ்பூங்காவில் தொடங்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக பூங்கா நுழைவுவாயில் பன்னிரெண்டு அடி உயரத்தில் பலாப்பழம், பம்பளிமாஸ் வாழை, எலுமிச்சை, அண்ணாசி, ஆரஞ்சு, மாம்பலம், போன்ற பழங்களை கொண்டு அலங்கார வளைவும், சுமார் ஓன்றரை டன் எடையில் ஆரஞ்சு ஆப்பிள், அண்ணாசி, மாதுளை, பம்பளிமாஸ், டிராகன் பழம் போன்ற பழங்களை கொண்டு விவசாய தம்பதிகளுடன் கூடிய பழவண்டி, அலங்கார மேடை, மயில் உருவம் வண்ணத்துப்பூச்சி ஆகிய உருவங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இவைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 



நீலகிரி மாவட்டத்தில் விளையும் பழவகைகள் காய்கறிகளான பிளம்ஸ், பீச், சப்போட்டா மற்றும் பல்வேறு பழங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜாம், பழரசம் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இது மட்டுமின்றி மாவட்டத்தில் விளையும் காய்கறிகளான பீன்ஸ், ஊருளை கிழங்கு, கேரட் பீட்ருட், நூல் கோல், முட்டைகோஸ் போன்றவை அரங்கில் இடம்பெற்றிருந்தன , இதில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, உரோடு, விழுப்புரம், கோவை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தோட்டக் கலைதுறையினர் கலந்து கொண்டனர்.



இந்த பழக்கண்காட்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அரிதான பழங்களை கண்காட்சியில் பங்கேற்க செய்தவர்கள், பல்வேறு மருத்துவ குணமிக்க பழங்களை பங்கேற்க செய்தவர்கள், வீட்டுத் தோட்டங்கள், அரசு அலுவலகங்களில் அமைக்கப்பட்டிருந்த சிறந்த பூந்தோட்டங்களுக்கான பரிசுகள் என 50-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்சியில், மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ், கோட்டாட்சியர் ரஞ்சித்சிங், தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்ரமணியம், குன்னூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் பெபிஷா, சிம்ஸ்பூங்கா மேலாளர் கோபால் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...