கோவை. : முறையான குடிநீர் வழங்காத சோமையம்பாளையம் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை. : முறையான குடிநீர் வழங்காத சோமையம்பாளையம் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் சோமையம்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட திருவள்ளுவர் நகரில் 500-க்கும் மேற்பட்டவர்கள் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் ஆறு மாத காலமாக குடிநீர் சரியாக வழங்கப்படாததால், அடிக்கடி சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபடும் சமயத்தில் மட்டும் ஒரு வாரத்திற்கு தண்ணீர் முறையாக வழங்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அரசு அதிகாரிகளிடம் இது குறித்து பலமுறை புகராளித்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படாததால், இப்பகுதி மக்கள் குடிநீர் மற்றும் உப்புத்தண்ணீரை காசு கொடுத்து வாங்கவேண்டிய சூழலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், கணுவாய் - ஆனைகட்டி சாலையில் முறையாக தண்ணீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து பொதுமக்கள் இன்று காலையில் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் பிரச்சனையால் சரியாக வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நிரந்தர தீர்வை அரசு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். அப்பகுதி மக்களின் சாலை மறியல் போராட்டம் காரணமாக, அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்தி வருகின்றனர்.