கோவை : தமிழக மக்கள் தங்களை புறக்கணித்தாலும், காவிரி - கோதாவரி நதிநீர் இணைப்புத் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என மத்திய தரைவழி, கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்ததாக தமிழக பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
கோவை : தமிழக மக்கள் தங்களை புறக்கணித்தாலும், காவிரி - கோதாவரி நதிநீர் இணைப்புத் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என மத்திய தரைவழி, கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்ததாக தமிழக பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் நீர் ஆதாரங்களை நிரந்தரமாக பெருக்கும் வகையில், காவிரி - கோதாவரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என கோரிக்கை வைத்ததின் அடிப்படையிலும், தொடர்ந்து மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியதின் அடிப்படையிலும், மத்திய தரைவழி, கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என ஏற்கனவே அறிவித்தார்.
இந்த நிலையில், இன்று தமிழக பா.ஜ.க. தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில். மத்திய தரைவழி கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரி கூறியதாக ஒரு பதிவை போட்டுள்ளனர். அந்தப் பதிவில், "தமிழ்நாட்டு மக்கள் எங்களைப் புறக்கணித்தாலும் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவது தான் எங்கள் முதல் வேலை," எனக் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை நிறைவேற்றுவதின் மூலம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் உள்பட 4 மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு பிரச்சனைகள் முடிவுக்கு வரும். காவிரியுடன் கோதாவரி இணைக்கப்பட்டு விட்டால் தமிழ்நாட்டின் தென்கோடி வரை தண்ணீர் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.