காவிரி - கோதாவரி நதிநீர் இணைப்புத் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் : மத்திய அமைச்சர் அறிவித்ததாக தமிழக பா.ஜ.க. தகவல்

கோவை : தமிழக மக்கள் தங்களை புறக்கணித்தாலும், காவிரி - கோதாவரி நதிநீர் இணைப்புத் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என மத்திய தரைவழி, கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்ததாக தமிழக பா.ஜ.க. தெரிவித்துள்ளது.


கோவை : தமிழக மக்கள் தங்களை புறக்கணித்தாலும், காவிரி - கோதாவரி நதிநீர் இணைப்புத் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என மத்திய தரைவழி, கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்ததாக தமிழக பா.ஜ.க. தெரிவித்துள்ளது. 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் நீர் ஆதாரங்களை நிரந்தரமாக பெருக்கும் வகையில், காவிரி - கோதாவரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என கோரிக்கை வைத்ததின் அடிப்படையிலும், தொடர்ந்து மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியதின் அடிப்படையிலும், மத்திய தரைவழி, கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என ஏற்கனவே அறிவித்தார். 

இந்த நிலையில், இன்று தமிழக பா.ஜ.க. தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில். மத்திய தரைவழி கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரி கூறியதாக ஒரு பதிவை போட்டுள்ளனர். அந்தப் பதிவில், "தமிழ்நாட்டு மக்கள் எங்களைப் புறக்கணித்தாலும் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவது தான் எங்கள் முதல் வேலை," எனக் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதின் மூலம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் உள்பட 4 மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு பிரச்சனைகள் முடிவுக்கு வரும். காவிரியுடன் கோதாவரி இணைக்கப்பட்டு விட்டால் தமிழ்நாட்டின் தென்கோடி வரை தண்ணீர் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...