கோவையில் விதிகளை மீறி தொடர்ந்து செயல்படும் பைக் டாக்ஸி : ஆட்டோ ஓட்டுநர்கள் சிறை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைப்பு

கோவை : காந்திபுரம் அருகே உள்ள ராம்நகர் பகுதியில் உரிமம் இன்றி இருசக்கர வாகனத்தை வாடகைக்கு ஓட்டி வந்ததாகக் கூறி ஆட்டோ ஓட்டுனர்கள் பைக் டாக்ஸி நிறுவனத்தினரை சிறை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.


கோவை : காந்திபுரம் அருகே உள்ள ராம்நகர் பகுதியில் உரிமம் இன்றி இருசக்கர வாகனத்தை வாடகைக்கு ஓட்டி வந்ததாகக் கூறி ஆட்டோ ஓட்டுனர்கள் பைக் டாக்ஸி நிறுவனத்தினரை சிறை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ரேப்பிட்டோ பைக் டாக்ஸியானது கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. ஆனால், உரிய உரிமம் இன்றி இருசக்கர வாகனத்தில் பைக் டேக்ஸி பயன்படுத்தி வருவது போக்குவரத்து விதிமீறல் என வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், தொடர்ந்து இந்த பைக் டேக்ஸியானது செயல்பட்டு வருகிறது. இது ஆட்டோ ஓட்டுனர் மற்றும் கால் டாக்ஸி ஓட்டுனர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பைக் டேக்ஸிகளை ஆங்காங்கே ஆட்டோ ஓட்டுநர்களும், கால் டாக்ஸி ஓட்டுநர்களும் வழிமறித்து பிடித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கின்றனர். 

இந்த நிலையில், இன்று ஆட்டோ ஓட்டுனர்கள் சிலர் காந்திபுரம் அருகே உள்ள ராம்நகர் பகுதியில் உரிமம் இன்றி ஓட்டி வந்த பைக் டாக்ஸிகளை சிறைப்பிடித்து கோவை காந்திபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.



இதுகுறித்து ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் கூறியதாவது :- ஏற்கனவே ஆட்டோ தொழில் முற்றிலும் ஒழிந்து வருகிறது. இதில், ஏதோ கொஞ்சம் கொஞ்சம் வாடகையை ஓட்டி எங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறோம். இந்த நிலையில், பைக் டாக்ஸி என்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தினர் எங்கள் வாழ்வாதாரத்தில் இடைஞ்சல் ஏற்படுத்துகின்றனர். அதேபோல, எந்தவித பாதுகாப்பும் இல்லாத இந்த பயணத்தினால், பொதுமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஆகவே, இந்த நிறுவனத்தை தடை செய்ய வேண்டும், எனக் கூறினார்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...