கோவை : கோவையில் தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், ஏற்கனவே நான்கு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கோவை : கோவையில் தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், ஏற்கனவே நான்கு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கடந்த மாதம் 18-ம் தேதி கோவை மாநகர் போத்தனூர் காவல் எல்லைக்குட்பட்ட நபி நகரில் வெளிநாட்டு உயர் ரக கார்களின் உதிரி பாகங்கள் மற்றும் சர்வீஸ் சென்டர் நடத்தி வரும் பரந்தராமன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் ஆகியோரின் உத்தரவின்பேரில், உதவி ஆணையாளர் செட்ரிக் மனுவேல் தலைமையிலான போலீசார் நடத்திய தீவிர விசாரணை நடத்தினர் அதில், சின்னியம்பாளையம் அருகே உள்ள கோல்டுவின்ஸ் பகுதியைச் சேர்ந்த ரவி (30)அவரது நண்பர்களான சென்னையைச் சேர்ந்த மருதுபாண்டி (30) திருப்பூரைச் சேர்ந்த நவீன் (25) மற்றும் ராஜன் பாபு ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், இவர்களை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த நிலையில், மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தேவராஜ், மகேஸ்வரன், கார்த்திக் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போத்தனூர் போலீசார் காவல் ஆணையரிடம் பரிந்துரை செய்தனர். இதையடுத்து, மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் மூன்று பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய இன்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை போத்தனூர் போலீசார் மத்திய சிறை நிர்வாகத்திடம் வழங்கியுள்ளனர்.
கடந்த மாதம் 18-ம் தேதி கோவை மாநகர் போத்தனூர் காவல் எல்லைக்குட்பட்ட நபி நகரில் வெளிநாட்டு உயர் ரக கார்களின் உதிரி பாகங்கள் மற்றும் சர்வீஸ் சென்டர் நடத்தி வரும் பரந்தராமன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் ஆகியோரின் உத்தரவின்பேரில், உதவி ஆணையாளர் செட்ரிக் மனுவேல் தலைமையிலான போலீசார் நடத்திய தீவிர விசாரணை நடத்தினர் அதில், சின்னியம்பாளையம் அருகே உள்ள கோல்டுவின்ஸ் பகுதியைச் சேர்ந்த ரவி (30)அவரது நண்பர்களான சென்னையைச் சேர்ந்த மருதுபாண்டி (30) திருப்பூரைச் சேர்ந்த நவீன் (25) மற்றும் ராஜன் பாபு ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், இவர்களை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த நிலையில், மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தேவராஜ், மகேஸ்வரன், கார்த்திக் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போத்தனூர் போலீசார் காவல் ஆணையரிடம் பரிந்துரை செய்தனர். இதையடுத்து, மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் மூன்று பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய இன்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை போத்தனூர் போலீசார் மத்திய சிறை நிர்வாகத்திடம் வழங்கியுள்ளனர்.