நீலகிரி : உதகையில் சர்வதேச தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் குதிரை சாகச விளையாட்டுகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
நீலகிரி : உதகையில் சர்வதேச தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் குதிரை சாகச விளையாட்டுகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
உதகை லவ்டேல் பகுதியில் இயங்கி வரும் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் பழம்பெரும் சர்வதேச தனியார் பள்ளியின் 161-வது நிறுவனர் தின விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் கடந்த மூன்று நாட்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு அங்கமாக, இன்று மாணவ, மாணவியர் கலந்து கொண்ட குதிரைகள் சாகச விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. குதிரைகள் மீது அமர்ந்தவாறே பல்வேறு உடற்பயிற்சிகள் செய்வது, புத்தகம் படிப்பது, படுத்து கொள்வது போன்ற சாகசங்களை அவர்கள் செய்து அசத்தினர்.

இதைத் தொடர்ந்து, ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள தடைகளை குதிரையோடு தாண்டி செல்லும் செயல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 8 வயது முதல் 15 வயதுடைய மாணவ, மாணவிகள் இச்சாகச நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில், நன்கு பயிற்சி பெற்றவர்கள் தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
உதகை லவ்டேல் பகுதியில் இயங்கி வரும் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் பழம்பெரும் சர்வதேச தனியார் பள்ளியின் 161-வது நிறுவனர் தின விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் கடந்த மூன்று நாட்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு அங்கமாக, இன்று மாணவ, மாணவியர் கலந்து கொண்ட குதிரைகள் சாகச விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. குதிரைகள் மீது அமர்ந்தவாறே பல்வேறு உடற்பயிற்சிகள் செய்வது, புத்தகம் படிப்பது, படுத்து கொள்வது போன்ற சாகசங்களை அவர்கள் செய்து அசத்தினர்.

இதைத் தொடர்ந்து, ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள தடைகளை குதிரையோடு தாண்டி செல்லும் செயல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 8 வயது முதல் 15 வயதுடைய மாணவ, மாணவிகள் இச்சாகச நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில், நன்கு பயிற்சி பெற்றவர்கள் தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.