நீலகிரி : கோடை விழாவின் ஒருபகுதியாக குன்னூரில் 2 நாட்கள் நடக்கும் 61-வது பழக்கண்காட்சி இன்று தொடங்கியது.
நீலகிரி : கோடை விழாவின் ஒருபகுதியாக குன்னூரில் 2 நாட்கள் நடக்கும் 61-வது பழக்கண்காட்சி இன்று தொடங்கியது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முதல் சீசன் நிலவுகிறது. சீசனை அனுபவிக்க வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க கோடை விழா நடத்தப்படுகிறது. கோடை விழா குன்னூரில் நடைபெறும் பழக்கண்காட்சியுடன் நிறைவு பெறுகிறது. இந்த ஆண்டு குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெறும் பழக் கண்காட்சி 61-வது ஆண்டாக நடத்தப்படுகிறது. இந்த 61-வது பழக் கண்காட்சி இன்று தொடங்கி நாளை முடிவடைகிறது. பூங்காவின் நுழைவு வாயிலில் பழங்களால் ஆன வரவேற்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவினுள் நுழைவு வாயில் அருகில் ஒன்றரை டன் ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களைக் கொண்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலான வண்ணத்து பூச்சி, மாட்டு வண்டி, மயில் ஆகிய உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பழக் கண்காட்சியில் தீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறையை தவிர கிருஷ்ணகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், ஈரோடு, தேனி, தர்மபுரி, திருநெல்வேலி, திருச்சி மற்றும் கடலூர் ஆகிய வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தோட்டக்கலைத் துறையினர் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தங்கள் மாவட்டத்தின் சிறப்புகளை பழங்கள் மூலம் வடிவமைத்துள்ளனர். வழக்கமாக பழக்கண்காட்சியில் பழங்கள் அறுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்படும். இதனால், பழங்கள் அதிக சேதம் ஏற்பட்டு வீணாகி வந்தது. இதனை தவிர்க்கும் விதமாக, இந்த ஆண்டு புதிய முறை கையாளப்படுகிறது. அதாவது, பழங்களுக்கு சேதம் ஏற்படாத வகையில், நூலில் பழங்களை கட்டி அலங்கரிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முதல் சீசன் நிலவுகிறது. சீசனை அனுபவிக்க வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க கோடை விழா நடத்தப்படுகிறது. கோடை விழா குன்னூரில் நடைபெறும் பழக்கண்காட்சியுடன் நிறைவு பெறுகிறது. இந்த ஆண்டு குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெறும் பழக் கண்காட்சி 61-வது ஆண்டாக நடத்தப்படுகிறது. இந்த 61-வது பழக் கண்காட்சி இன்று தொடங்கி நாளை முடிவடைகிறது. பூங்காவின் நுழைவு வாயிலில் பழங்களால் ஆன வரவேற்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவினுள் நுழைவு வாயில் அருகில் ஒன்றரை டன் ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களைக் கொண்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலான வண்ணத்து பூச்சி, மாட்டு வண்டி, மயில் ஆகிய உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பழக் கண்காட்சியில் தீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறையை தவிர கிருஷ்ணகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், ஈரோடு, தேனி, தர்மபுரி, திருநெல்வேலி, திருச்சி மற்றும் கடலூர் ஆகிய வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தோட்டக்கலைத் துறையினர் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தங்கள் மாவட்டத்தின் சிறப்புகளை பழங்கள் மூலம் வடிவமைத்துள்ளனர். வழக்கமாக பழக்கண்காட்சியில் பழங்கள் அறுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்படும். இதனால், பழங்கள் அதிக சேதம் ஏற்பட்டு வீணாகி வந்தது. இதனை தவிர்க்கும் விதமாக, இந்த ஆண்டு புதிய முறை கையாளப்படுகிறது. அதாவது, பழங்களுக்கு சேதம் ஏற்படாத வகையில், நூலில் பழங்களை கட்டி அலங்கரிக்கப்பட்டுள்ளது.