சூலூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அபார வெற்றி

கோவை : சூலூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமி 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

கோவை : சூலூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமி 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். 

சூலூர் தொகுதிக்கு கடந்த 19-ம் தேதி நடந்த இடைத்தேர்தலில் 79.41 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையுடன் சேர்த்து சூலூர் உள்ளிட்ட இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நேற்று நடைபெற்றது. அதில், அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமி 10,0782 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி 90,669 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன்மூலம், 10 ஆயிரத்து 113 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கந்தசாமி சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ளார். அ.ம.மு.க. வேட்பாளர் சுகுமார் 16,530 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமி 6,644 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் விஜயராகவன் 4,335 வாக்குகள் பெற்றுள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 47.38 சதவீத வாக்குகள் பெற்று மறைந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ. கனகராஜ் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது எம்.எல்.ஏ.வாக தேர்வாகியுள்ள கந்தசாமி, மறைந்த எம்.எல்.ஏ. கனகராஜின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...