நீலகிரி : நீலகிரி மக்களவை தொகுதியில் நாளை நடைபெற இருக்கும் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார்.
நீலகிரி : நீலகிரி மக்களவை தொகுதியில் நாளை நடைபெற இருக்கும் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார்.
நீலகிரி மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தையும் எண்ணுவதற்கான ஏற்பாடுகள் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். பின்னர், உதகையில் செய்தியாளர்களிடையே அவர் பேசும் போது :- 6 அரங்குகளில் நடைபெறும் வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 14 மேசைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணப்பட உள்ளது. நீலகிரி தொகுதியில் குறைந்த பட்சமாக குன்னூர் 16 சுற்றுகளும், அதிகபட்சமாக அவிநாசி மற்றும் பவானிசாகர் 23 சுற்றுகளுமாக வாக்கு எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கையில் 318 ஊழியர்களும், பாதுகாப்பு பணியில் 300 காவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர், என அவர் கூறினர்.
