பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச மாநாட்டில் கோவை மாநகராட்சி ஆணையர் பங்கேற்பு

கோவை : ஜெர்மனியில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச மாநாட்டில் கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன் குமார் பங்கேற்றுள்ளார்.


கோவை : ஜெர்மனியில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச மாநாட்டில் கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன் குமார் பங்கேற்றுள்ளார். 

ஜெர்மனியின் சுற்றுச்சூழல் அமைச்சகம், இயற்கை பாதுகாப்பு மற்றும் அணுசக்தி பாதுகாப்பு அமைப்பு இணைந்து ஹெய்டெல்பெர்க் நகரில் பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை நடக்கும் இந்த மாநாட்டில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பருவநிலை மாற்றத்தில் அனுபவமிக்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பில் பல்வேறு பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் மாநகராட்சி ஆணையர் பதவி பொறுப்பில் இருப்பவர்களில் கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன் குமார் மட்டுமே இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளார். இவருடன் ஸ்மார்ட் சிட்டி திட்ட இணை செயலாளர் குணல் குமார், அம்ரூத் திட்டத்தின் உதவி இயக்குநர் நேஹா சிங் மற்றும் ஆலோசகர்கள், வல்லுநர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த மாநாட்டின் நோக்கமானது, பல்வேறு நாடுகள் மற்றும் நகரங்கள், பிராந்தியங்களின் அதிகாரமிக்க தலைவர்களை ஒன்றிணைத்து பருவநிலை மாறுதலுக்கு காரணமாக இருக்கும் நடவடிக்கை குறைப்பதற்கான செயல்களை மேற்கொள்ள வேண்டும் என்பதாகும். இந்த மாநாட்டின் மூலம் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா. சபையின் பருவநிலை மாறுதலுக்கான மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...