கோவை : ஆனைகட்டியில செயல்பட்டு வரும் டின்கிள் சேவா கேந்திராவில் கோவை மெட்ரோ பொலிடன் ரவுண்ட் டேபிள் 62 மற்றும் கோவை மெட்ரோ பொலிடன் லேடிஸ் சர்கிள் 23 ஆகியவை சார்பில் வகுப்பறை அர்ப்பணிக்கப்பட்டது.
கோவை : ஆனைகட்டியில செயல்பட்டு வரும் டின்கிள் சேவா கேந்திராவில் கோவை மெட்ரோ பொலிடன் ரவுண்ட் டேபிள் 62 மற்றும் கோவை மெட்ரோ பொலிடன் லேடிஸ் சர்கிள் 23 ஆகியவை சார்பில் வகுப்பறை அர்ப்பணிக்கப்பட்டது.
இந்த வகுப்பறை பன்னிமடை மற்றும் ஆனைகட்டி பகுதிகளை சேர்ந்த 100 பழங்குடியின குழந்தைகள் அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளது. பழங்குடியின குழந்தைகளுக்கு முழுமையான கல்வியை வழங்குவதே நோக்கம் என அவர்கள் தெரிவித்தனர். இந்த வகுப்பறை அர்ப்பணிப்பு நிகழ்வின் போது, தேசிய திட்ட ஆலோசகர் டி. அஜ்மல், ரவுண்ட் டேபிள் இந்தியாவின் பகுதி தலைவர் எஸ். அஸ்வின் மற்றும் லேடிஸ் சர்கிள் இந்தியாவின் பகுதி செயலாளர் பூனம் பஃப்னா உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

‘கல்வியின் மூலம் சுதந்திரம்’ என்பதை வலியுறுத்தும் விதமாகவும், வகுப்பறைகளின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் இந்த வகுப்பறை கட்டப்பட்டதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரமுகர்கள் தெரிவித்தனர். அதோடு, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கல்வி கிடைத்திடும் வகையில் நாடு முழுவதும் இலவச வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
இந்த வகுப்பறை பன்னிமடை மற்றும் ஆனைகட்டி பகுதிகளை சேர்ந்த 100 பழங்குடியின குழந்தைகள் அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளது. பழங்குடியின குழந்தைகளுக்கு முழுமையான கல்வியை வழங்குவதே நோக்கம் என அவர்கள் தெரிவித்தனர். இந்த வகுப்பறை அர்ப்பணிப்பு நிகழ்வின் போது, தேசிய திட்ட ஆலோசகர் டி. அஜ்மல், ரவுண்ட் டேபிள் இந்தியாவின் பகுதி தலைவர் எஸ். அஸ்வின் மற்றும் லேடிஸ் சர்கிள் இந்தியாவின் பகுதி செயலாளர் பூனம் பஃப்னா உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

‘கல்வியின் மூலம் சுதந்திரம்’ என்பதை வலியுறுத்தும் விதமாகவும், வகுப்பறைகளின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் இந்த வகுப்பறை கட்டப்பட்டதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரமுகர்கள் தெரிவித்தனர். அதோடு, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கல்வி கிடைத்திடும் வகையில் நாடு முழுவதும் இலவச வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.