கோவை : மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை அருகே உள்ள தொட்டிபாளையத்தை சேர்ந்த பாலச்சந்திரன் என்பவரது மகன் தினேஷ். இவர் கோவை தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். இவர் தனது நண்பர்கள் ஜந்து பேருடன் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளிப்பதற்காக நெல்லித்துறை அருகே உள்ள குன்டுக்கல்துறை பகுதிக்கு சென்றுள்ளனர். சக நண்பர்களுடன் ஆற்றில் இறங்கி குளித்து விளையாடி கொண்டிருந்த நிலையில், தினேஷ் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுறது. தினேஷ்க்கு நீச்சல் தெரியாத நிலையில் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அவர் நீரிழ் மூழ்கியுள்ளார். இதனை கண்ட அவரது நண்பர்கள் மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்படி, விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நீண்ட நேரம் போராடி தினேஷை சடலமாக மீட்டனர். இதனையடுத்து, மீட்கபட்ட தினேஷின் உடல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை அருகே உள்ள தொட்டிபாளையத்தை சேர்ந்த பாலச்சந்திரன் என்பவரது மகன் தினேஷ். இவர் கோவை தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். இவர் தனது நண்பர்கள் ஜந்து பேருடன் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளிப்பதற்காக நெல்லித்துறை அருகே உள்ள குன்டுக்கல்துறை பகுதிக்கு சென்றுள்ளனர். சக நண்பர்களுடன் ஆற்றில் இறங்கி குளித்து விளையாடி கொண்டிருந்த நிலையில், தினேஷ் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுறது. தினேஷ்க்கு நீச்சல் தெரியாத நிலையில் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அவர் நீரிழ் மூழ்கியுள்ளார். இதனை கண்ட அவரது நண்பர்கள் மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்படி, விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நீண்ட நேரம் போராடி தினேஷை சடலமாக மீட்டனர். இதனையடுத்து, மீட்கபட்ட தினேஷின் உடல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.