வழி தவறிய புள்ளிமான் தெருநாய் கடித்து பலி

மோகனூர்: வழி தவறி வந்த புள்ளிமானை, தெருநாய்கள் கடித்து குதறியதில், படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தது.நாமக்கல் மாவட்டம், மோகனூர் காவிரி கரையோரம் உள்ள அசலதீபேஸ்வரர் கோவில் அருகில் வாழைத்தோப்பு உள்ளது. இங்கு, நேற்று காலை, 11:00 மணிக்கு, புள்ளிமான் ஒன்று, வழி தவறி வந்தது. அதை பார்த்த, இரண்டு தெருநாய்கள் மானை துரத்தின. பயந்துபோன புள்ளிமான், கோவில் பின்புறம் உள்ள மயான சுற்றுச்சுவரை தாண்டி குதித்தது. அங்கு சுற்றி வளைத்த தெருநாய்கள் மானை கடித்து குதறின. அப்போது, ஆற்றில் குளிக்க வந்த பொதுமக்கள், தெருநாய்களை விரட்டி மானை மீட்டனர். இது குறித்து, மாவட்ட வன அலுவலர் காஞ்சனாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வனச்சரகர் கனகரத்தினம் உத்தரவின் பேரில், வனக்காப்பாளர்கள் அருள்குமார், மாதேஸ்வரன், அன்பரசு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர். ஆனால், அதற்குள் புள்ளிமான் பரிதாபமாக இறந்தது. நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மானை பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...