திருப்பூர் : அவிநாசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், 6 வயது சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் : அவிநாசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், 6 வயது சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கன்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (30) என்பவர் தனது மனைவி தமிழ் செல்வி (26), மகன் ஈஸ்வரன் (6) மகள் நித்திகா (3) ஆகியோருடன் தனது இருசக்கர வாகனத்தில் சொந்த ஊரான வேலூர் மாவட்டம் குடியாத்தத்திற்கு திருமண விழாவிற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவிநாசி பைபாஸ் சாலையில் நேற்று அதிகாலை வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவர்கள் வந்த வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், மகன் ஈஸ்வரன் சம்பவ இடத்தில் பலியானார். பலத்த காயங்களுடன் அவிநாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு சென்ற போது, அங்கு ரமேஷ் உயிரிழந்தார். மேலும், இன்று காலை சிகிச்சை பலனின்றி தமிழ்ச் செல்வியும் உயிரிழந்தார். அதிர்ஷ்ட வசமாக 3 வயது குழந்தை நித்திகா உயிர் தப்பினார்.
இதனிடையே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த இந்த சம்பவம் குறித்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கன்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (30) என்பவர் தனது மனைவி தமிழ் செல்வி (26), மகன் ஈஸ்வரன் (6) மகள் நித்திகா (3) ஆகியோருடன் தனது இருசக்கர வாகனத்தில் சொந்த ஊரான வேலூர் மாவட்டம் குடியாத்தத்திற்கு திருமண விழாவிற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவிநாசி பைபாஸ் சாலையில் நேற்று அதிகாலை வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவர்கள் வந்த வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், மகன் ஈஸ்வரன் சம்பவ இடத்தில் பலியானார். பலத்த காயங்களுடன் அவிநாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு சென்ற போது, அங்கு ரமேஷ் உயிரிழந்தார். மேலும், இன்று காலை சிகிச்சை பலனின்றி தமிழ்ச் செல்வியும் உயிரிழந்தார். அதிர்ஷ்ட வசமாக 3 வயது குழந்தை நித்திகா உயிர் தப்பினார்.
இதனிடையே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த இந்த சம்பவம் குறித்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.