அவிநாசி அருகே சாலை விபத்தில் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

திருப்பூர் : அவிநாசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், 6 வயது சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் : அவிநாசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், 6 வயது சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கன்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (30) என்பவர் தனது மனைவி தமிழ் செல்வி (26), மகன் ஈஸ்வரன் (6) மகள் நித்திகா (3) ஆகியோருடன் தனது இருசக்கர வாகனத்தில் சொந்த ஊரான வேலூர் மாவட்டம் குடியாத்தத்திற்கு திருமண விழாவிற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவிநாசி பைபாஸ் சாலையில் நேற்று அதிகாலை வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவர்கள் வந்த வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், மகன் ஈஸ்வரன் சம்பவ இடத்தில் பலியானார். பலத்த காயங்களுடன் அவிநாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு சென்ற போது, அங்கு ரமேஷ் உயிரிழந்தார். மேலும், இன்று காலை சிகிச்சை பலனின்றி தமிழ்ச் செல்வியும் உயிரிழந்தார். அதிர்ஷ்ட வசமாக 3 வயது குழந்தை நித்திகா உயிர் தப்பினார். 

இதனிடையே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த இந்த சம்பவம் குறித்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...