தமிழக அரசின் 10பி ஆணையை மதிக்காத பிரிக்கால் நிறுவனம் : நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை : தமிழக அரசின் 10பி ஆணையை மதிக்காமல், பணிக்கு சென்றவர்களை திருப்பி அனுப்பிய பிரிக்கால் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை : தமிழக அரசின் 10பி ஆணையை மதிக்காமல், பணிக்கு சென்றவர்களை திருப்பி அனுப்பிய பிரிக்கால் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள பிரிக்கால் தொழிற்சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பழிவாங்கும் நடவடிக்கையாக 302 பேர் இடமாற்றம் செய்து பொருள்கள் நிர்வாகம் உத்தரவிட்டது. ஒரு சிலரை தவிர 293 பேர் பணி மாற்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் தொழில் தகராறு ஏற்பட்டது. பின்னர், தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது, ஊழியர்களை பலி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட மாட்டோம் என பிரிக்கால் நிறுவனம் தெரிவித்ததாகவும், எனவே, 293 பேரின் பணியிட மாற்றல் உத்தரவு குறித்து நீதிமன்ற தீர்ப்பு வரும் வரையில் பணியிட மாற்றத்திற்கு 10பி அரசாணையை தமிழக அரசு பிறப்பித்திருந்தது. 



இந்த நிலையில, அரசாணையை அவமதிக்கும் வகையில், இன்று பணிக்கு சென்றவர்களை உள்ளே அனுமதிக்காமல் பிரிக்கால் நிர்வாகம் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் 250-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...