கோவை : கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள டாஸ்மார்க்கில் ஏற்பட்ட தகராறின் போது, அம்மிக் கல்லை போட்டு தாக்கியதில் படுகாயம் அடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை : கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள டாஸ்மார்க்கில் ஏற்பட்ட தகராறின் போது, அம்மிக் கல்லை போட்டு தாக்கியதில் படுகாயம் அடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிங்காநல்லூர் அருகே உள்ள பெருமாள் கோவில் வீதியில் வசித்து வருபவர் சுப்பன் (26). இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று மதியம் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மார்க்கில் மது அருந்த சென்றுள்ளார். அப்போது, அவரது அருகே நீலிகோணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் என்ற சக்திவேலும் (27) மது அருந்திக் கொண்டிருந்தார். இருவரும் திடீரென மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வெளியில் வந்த சுப்பன், சக்திவேலின் குடும்ப உறுப்பினர்களை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த சக்திவேல் அருகே இருந்த அம்மிக்கல்லை கொண்டு சுப்பனை தாக்கியுள்ளார். இதில், தாக்குதலுக்கு உள்ளான சுப்பன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதையடுத்து சக்திவேல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் சுப்பனை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கு இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை சுப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, குற்றவாளியை பிடிக்க துணை ஆணையாளர் பாலாஜி சரவணனின் உத்தரவின்பேரில், உதவி ஆணையாளர் சோமசுந்தரம் மேற்பார்வையில் சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் ஆனந்த் மற்றும் உதவி ஆய்வாளர்கள் காசிப்பாண்டியன், அர்ஜுன், மற்றும் தலைமைக் காவலர் சுகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிங்காநல்லூர் அருகே உள்ள பெருமாள் கோவில் வீதியில் வசித்து வருபவர் சுப்பன் (26). இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று மதியம் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மார்க்கில் மது அருந்த சென்றுள்ளார். அப்போது, அவரது அருகே நீலிகோணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் என்ற சக்திவேலும் (27) மது அருந்திக் கொண்டிருந்தார். இருவரும் திடீரென மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வெளியில் வந்த சுப்பன், சக்திவேலின் குடும்ப உறுப்பினர்களை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த சக்திவேல் அருகே இருந்த அம்மிக்கல்லை கொண்டு சுப்பனை தாக்கியுள்ளார். இதில், தாக்குதலுக்கு உள்ளான சுப்பன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதையடுத்து சக்திவேல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் சுப்பனை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கு இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை சுப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, குற்றவாளியை பிடிக்க துணை ஆணையாளர் பாலாஜி சரவணனின் உத்தரவின்பேரில், உதவி ஆணையாளர் சோமசுந்தரம் மேற்பார்வையில் சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் ஆனந்த் மற்றும் உதவி ஆய்வாளர்கள் காசிப்பாண்டியன், அர்ஜுன், மற்றும் தலைமைக் காவலர் சுகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
