மலர் கண்காட்சியின் போது உதகையில் ஏற்படும் போக்குவரத்தை சீர்படுத்த 'நீலகிரி படை' தொடக்கம்

நீலகிரி : உதகையில் 5 நாட்கள் நடக்கும் மலர் கண்காட்சியின் போது ஏற்படும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ‘நீலகிரி படை‘ என்ற அமைப்பை காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தொடங்கி வைத்தார்.

நீலகிரி : உதகையில் 5 நாட்கள் நடக்கும் மலர் கண்காட்சியின் போது ஏற்படும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ‘நீலகிரி படை‘ என்ற அமைப்பை காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தொடங்கி வைத்தார்.

மலைப்பிரதேசமான நீலகிரியில் கோடை சீசன் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்து செல்கின்றனர். இதனால், உதகை நகரில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாகி விட்டது. இந்த நிலையில், உதகையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ‘நீலகிரி படை‘ என்ற புதிய சமூக பாதுகாப்பு அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பில் உள்ளவர்கள் மலர் கண்காட்சி நடைபெறும் நாட்களான 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை உதகையில் தலைகுந்தா, பிங்கர்போஸ்ட், காந்தல், சேரிங்கிராஸ், லவ்டேல், எல்லநள்ளி, பட்பயர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்கக் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட உள்ளனர்.

இந்த அமைப்பின் தொடக்க நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா கலந்துகொண்டு, நீலகிரி படை அமைப்பை தொடங்கி வைத்தார். மேலும், அமைப்பில் உள்ள 60 பேருக்கு ‘நீலகிரி படை‘ என்று குறிப்பிடப்பட்ட மஞ்சள் நிற டீ-சர்ட் மற்றும் நீல நிற தொப்பியை வழங்கினார்.

பின்னர் அமைப்பில் உள்ளவர்களிடம் அவர் பேசும் போது:- உதகையில் மலர் கண்காட்சி நடைபெறும் நாட்களான வரும் 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், பொதுமக்களோடு இணைந்து அதனை சீர் செய்ய வேண்டும். மேலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கும், துணை காவல் அலுவலகத்துக்கும், எஸ்.பி. அலுவலகத்துக்கும் தகவல் கொடுக்க வேண்டும். இந்த அமைப்பில் உள்ளவர்கள் தன்னிச்சையாக செயல்படக்கூடாது. சிறப்பாக செயல்படுபவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்படும், இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை காவல் கணிப்பாளர் தங்கவேல், ஆய்வாளர்கள் சதாசிவம், முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...