10 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட பைன் ஃபாரஸ்ட் பகுதி : சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்

நீலகிரி : 10 மாத இடைவெளிக்குப் பிறகு திறக்கப்பட்ட பைன் ஃபாரஸ்ட் பகுதியைக் காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நீலகிரி : 10 மாத இடைவெளிக்குப் பிறகு திறக்கப்பட்ட பைன் ஃபாரஸ்ட் பகுதியைக் காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.



உதகை - கூடலூர் சாலையில் தலைக்குந்தா அருகே காமராஜர் சாகர் அணை உள்ளது. இந்த அணையின் ஒரு பகுதியில் பைன் மரங்கள் நிறைந்த வனப்பகுதியை காண சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக, கேரளா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர். சாலையில் இருந்து பைன் மரங்களுக்கு நடுவே அணைக்கு நடந்து செல்லும் பகுதி சரிவான பகுதியாக உள்ளது. மரத்தின் இலைகள் உதிர்ந்துள்ள நிலையில், முறையான பாதை இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் வழுக்கி விழும் சூழல் நிலவியது. .



இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி இப்பகுதியை மேம்படுத்த வனத்துறை திட்டமிட்டது. இதற்காக கடந்த ஆண்டு ஜூலை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதிக்கப்படவில்லை. பைன் ஃபாரஸ்ட் சரிவான பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்ல பைன் மரக் கட்டைகளைக் கொண்டு கைப்பிடிகள் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், தற்போது சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். இதனை முத்தநாடு மந்து சூழல் மேம்பாட்டுக் குழுவினர் தூய்மையாக பராமரித்து வருவதால், இவற்றைக்காண சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...