நீலகிரி : 10 மாத இடைவெளிக்குப் பிறகு திறக்கப்பட்ட பைன் ஃபாரஸ்ட் பகுதியைக் காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நீலகிரி : 10 மாத இடைவெளிக்குப் பிறகு திறக்கப்பட்ட பைன் ஃபாரஸ்ட் பகுதியைக் காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உதகை - கூடலூர் சாலையில் தலைக்குந்தா அருகே காமராஜர் சாகர் அணை உள்ளது. இந்த அணையின் ஒரு பகுதியில் பைன் மரங்கள் நிறைந்த வனப்பகுதியை காண சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக, கேரளா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர். சாலையில் இருந்து பைன் மரங்களுக்கு நடுவே அணைக்கு நடந்து செல்லும் பகுதி சரிவான பகுதியாக உள்ளது. மரத்தின் இலைகள் உதிர்ந்துள்ள நிலையில், முறையான பாதை இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் வழுக்கி விழும் சூழல் நிலவியது. .

இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி இப்பகுதியை மேம்படுத்த வனத்துறை திட்டமிட்டது. இதற்காக கடந்த ஆண்டு ஜூலை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதிக்கப்படவில்லை. பைன் ஃபாரஸ்ட் சரிவான பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்ல பைன் மரக் கட்டைகளைக் கொண்டு கைப்பிடிகள் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், தற்போது சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். இதனை முத்தநாடு மந்து சூழல் மேம்பாட்டுக் குழுவினர் தூய்மையாக பராமரித்து வருவதால், இவற்றைக்காண சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உதகை - கூடலூர் சாலையில் தலைக்குந்தா அருகே காமராஜர் சாகர் அணை உள்ளது. இந்த அணையின் ஒரு பகுதியில் பைன் மரங்கள் நிறைந்த வனப்பகுதியை காண சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக, கேரளா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர். சாலையில் இருந்து பைன் மரங்களுக்கு நடுவே அணைக்கு நடந்து செல்லும் பகுதி சரிவான பகுதியாக உள்ளது. மரத்தின் இலைகள் உதிர்ந்துள்ள நிலையில், முறையான பாதை இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் வழுக்கி விழும் சூழல் நிலவியது. .

இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி இப்பகுதியை மேம்படுத்த வனத்துறை திட்டமிட்டது. இதற்காக கடந்த ஆண்டு ஜூலை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதிக்கப்படவில்லை. பைன் ஃபாரஸ்ட் சரிவான பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்ல பைன் மரக் கட்டைகளைக் கொண்டு கைப்பிடிகள் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், தற்போது சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். இதனை முத்தநாடு மந்து சூழல் மேம்பாட்டுக் குழுவினர் தூய்மையாக பராமரித்து வருவதால், இவற்றைக்காண சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.