சூலூரில் கிராம உதவி அலுவலரிடம் பூத் சிலிப்புகளை பறித்த அ.தி.மு.க.வினர்: நடவடிக்கை எடுக்கக்கோரி உதவி அலுவலரை சிறைபிடித்த தி.மு.க.வினர்

கோவை : சூலூரில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கிராம உதவி அலுவலரிடம் அ.தி.மு.க.வினர் பூத் சிலிப் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : சூலூரில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கிராம உதவி அலுவலரிடம் அ.தி.மு.க.வினர் பூத் சிலிப் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிச்சாமி போட்டியிடுகின்றார். இந்த நிலையில், சூலூர் தொகுதிக்கு உட்பட்ட இடையர்பாளையம் பகுதியில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக உதவி அலுவலர் (தண்டல்காரர்) தங்கவேல் தொடர்ந்து பணிபுரிந்து வரும் நிலையில், அவர் பூத் சிலிப் வழங்கும் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.



அப்போது, அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி தலைவர் பாலு என்ற பாலசுப்பிரமணியம் மற்றும் முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் ஆறுமுகம் ஆகியோர் தண்டல்காரர் தங்கவேலுவை மிரட்டி பூத் சிலிப்பை பெற்றுள்ளதாகவும், தி.மு.க.வினர்களின் பூத் சிலிப்புகளை வழங்காமல், அ.தி.மு.க.வினரின் பூத் சிலிப்புகளை மட்டுமே வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி தி.மு.க. தேர்தல் பொறுப்பாளரும், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினருமான ஜெயராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் மகாலிங்கம், அறிவரசு மற்றும் குறிச்சி பிரபாகரன் உள்ளிட்ட தி.மு.க.வினரும், பொதுமக்களும் கிராம நிர்வாக உதவி அலுவலர் தங்கவேலை சிறைப்பிடித்து தேர்தல் அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். 

இந்நிலையில், அ.தி.மு.க.வினர் அப்பகுதியில் கூடி, இந்த பிரச்சினை வெளியே தெரியாமல் இருக்க கிராம நிர்வாக அலுவலரை வெளியே விடக்கோரி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை டி.எஸ்.பி. பாஸ்கரனிடம் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வலியுறுத்தி தி.மு.க.வினர் சிறைப்பிடிக்கப்பட்ட கிராம நிர்வாக உதவி அலுவலரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...