நீலகிரி : நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சுற்றுலாவிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் விடுதிகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சுற்றுலாவிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் விடுதிகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலுடன் கூடிய இதமான காலநிலை நிலவியது. இதனால், தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளதால், இந்த கால நிலையை நாள்தோறும் வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்தனர். இந்த நிலையில், கடந்த 3 நாட்களாகப் பிற்பகலில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

குன்னூர், கோத்தகிரியில் சாரல் மழையும், உதகையில் சீரான இடைவெளியில் பலத்த மழையும் பெய்து வருகிறது. இந்த மழையால் மழைநீர் சாலைகளில் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், பலர் தங்கும் விடுதிகளிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டது. இந்த மழை அணைப் பகுதிகளிலும் பெய்துள்ளதால், கோடையில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை ஓரளவு சமாளிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலுடன் கூடிய இதமான காலநிலை நிலவியது. இதனால், தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளதால், இந்த கால நிலையை நாள்தோறும் வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்தனர். இந்த நிலையில், கடந்த 3 நாட்களாகப் பிற்பகலில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

குன்னூர், கோத்தகிரியில் சாரல் மழையும், உதகையில் சீரான இடைவெளியில் பலத்த மழையும் பெய்து வருகிறது. இந்த மழையால் மழைநீர் சாலைகளில் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், பலர் தங்கும் விடுதிகளிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டது. இந்த மழை அணைப் பகுதிகளிலும் பெய்துள்ளதால், கோடையில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை ஓரளவு சமாளிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.