மேட்டுப்பாளையத்தில் காட்டுயானை தாக்கி விவசாய கூலி தொழிலாளி படுகாயம்

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காட்டுயானை தாக்கி விவசாய கூலி தொழிலாளி படுகாயமடைந்தார்.


கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காட்டுயானை தாக்கி விவசாய கூலி தொழிலாளி படுகாயமடைந்தார்.

மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் உள்ள கல்லார் பகுதிகளில் கடந்த சில தினங்களாக காட்டுயானைகள் நடமாட்டம் அதிமாக உள்ளது. வனப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தண்ணீரினை தேடி யானை உள்ளிட்ட வன விலங்குகள் பவானி ஆறு மற்றும் கல்லார் நீரோடைகளை தேடி வரத்து வங்கியுள்ளன. இந்த நிலையில், இன்று அதிகாலை கல்லார் தூரிப்பாலம் அருகே விவசாய நிலத்தில் ஒற்றை காட்டுயானை நுழைந்துள்ளது. அப்போது, விவசாய பணிக்காக சென்ற கிருஷ்ணமூர்த்தி என்ற கூலி தொழிலாளியை அந்த காட்டுயானை துரத்தி தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் கூச்சலிடவே, காட்டு யானை அவரை விட்டு விட்டு அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. 

பின்னர், தலைப்பகுதியில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய கிருஷ்ணமூர்த்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது, கோடை காலம் என்பதால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருக்கும். எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...