இந்தியாவிலேயே ஸ்கோடா கார் நிறுவனத்தின் மிகப்பெரிய பணிமனை கோவையில் தொடக்கம்

கோவை : தென்னிந்தியாவில் சந்தையை விரிவுபடுத்தும் விதமாக, இந்தியாவிலேயே மிகப்பெரிய பணிமனையை கோவையில் தொடங்கியது ஸ்கோடா கார் நிறுவனம்.

கோவை : தென்னிந்தியாவில் சந்தையை விரிவுபடுத்தும் விதமாக, இந்தியாவிலேயே மிகப்பெரிய பணிமனையை கோவையில் தொடங்கியது ஸ்கோடா கார் நிறுவனம். 



இந்தியாவில் அனைத்து வகை பிரிவினரையும் கவரும் வகையில் ஸ்கோடா கார் நிறுவனம் பல்வேறு வகையான கார்களை அறிமுகம் செய்து இந்திய சந்தையில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்தநிலையில், தென்னிந்தியாவில் தனது விற்பனையை அதிகரிக்கும் விதமாகவும், மேலும் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப மிகப்பெரிய உயர்தர கார் பணிமனையை கோவை சவுரிபாளையத்தில் துவக்கி உள்ளது. மொத்தம் 49,585 சதுர அணியைக் கொண்ட இந்த பணிமனையில் ஒரே நேரத்தில் 50 கார்களை நிறுத்த முடியும். மேலும், ஆண்டிற்கு 20,000 கார்களை சர்வீஸ் செய்ய முடியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய பணிமனை துவக்க விழா எஸ்.ஜி.ஏ.வ்கார்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி அற்புதராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக ஸ்கோடா நிறுவனத்தின் சேவை மற்றும் மார்க்கெட்டிங் இயக்குனர் ஜாக்ஹோலிஸ் கலந்து பணிமனையை திறந்து வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “ஸ்கோடா இந்தியா தனது வர்த்தகத்தை தென்னிந்தியாவில் விரிவுபடுத்தும் விதமாக இந்த பணிமனை திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதிகளின் மூலம், எங்களது பிராண்டை மேம்படுத்த முடியும். மேலும், எஸ்.ஜி.ஏ. கார்ஸ் உடன் ஸ்கோடா இந்தியாவின் ஒன்றிணந்த செயல்பாட்டில் நம்பிக்கை உள்ளது,” என்றார்.

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...