கோவை : கணவர் குடிப்பழக்கத்தை நிறுத்த சாணி பவுடர் குடித்து பயமுறுத்த நினைத்த மனைவி பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை : கணவர் குடிப்பழக்கத்தை நிறுத்த சாணி பவுடர் குடித்து பயமுறுத்த நினைத்த மனைவி பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை ஈச்சனாரி அருகே உள்ள சர்வேசா காலனியில் வசிப்பவர் ராஜா மற்றும் சங்கீதா (32) தம்பதியினர். இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளார். ராஜா, கற்பகம் கல்லூரியில் கேட்டரிங் வேலை செய்து வருகிறார். மேலும், இவர் தினமும் பணி முடிந்து வீட்டிற்கு வரும் பொழுது மதுபோதையில் வருவார். பின்னர், மது போதையில் மனைவியுடன் தகராறிலும் ஈடுபடுவார். இந்த நிலையில், மனைவி சங்கீதா கணவரின் குடிப்பழக்கத்தை நிறுத்த பல முயற்சிகள் எடுத்தும் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, நேற்று கணவரின் குடிப்பழக்கத்தை நிறுத்த சாணி பவுடர் குடித்து பயமுறுத்தியுள்ளார்.

இதனால், சங்கீதாவிற்கு உடல்நிலை மோசமானதை அடுத்து அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து தகவலறிந்து வந்த மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்த பெண்ணின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
கோவை ஈச்சனாரி அருகே உள்ள சர்வேசா காலனியில் வசிப்பவர் ராஜா மற்றும் சங்கீதா (32) தம்பதியினர். இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளார். ராஜா, கற்பகம் கல்லூரியில் கேட்டரிங் வேலை செய்து வருகிறார். மேலும், இவர் தினமும் பணி முடிந்து வீட்டிற்கு வரும் பொழுது மதுபோதையில் வருவார். பின்னர், மது போதையில் மனைவியுடன் தகராறிலும் ஈடுபடுவார். இந்த நிலையில், மனைவி சங்கீதா கணவரின் குடிப்பழக்கத்தை நிறுத்த பல முயற்சிகள் எடுத்தும் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, நேற்று கணவரின் குடிப்பழக்கத்தை நிறுத்த சாணி பவுடர் குடித்து பயமுறுத்தியுள்ளார்.

இதனால், சங்கீதாவிற்கு உடல்நிலை மோசமானதை அடுத்து அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து தகவலறிந்து வந்த மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்த பெண்ணின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.