கோவை : கோவையில் மறைந்த முன்னாள் எம்.பி. ராமநாதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தி.மு.க. தலைவஎ ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.
கோவை : கோவையில் மறைந்த முன்னாள் எம்.பி. ராமநாதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தி.மு.க. தலைவஎ ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.

கோவையில் உயிரிழந்த தி.மு.க. உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மு.இராமநாதன் இன்று காலை காலமானார். அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ராஜா வீதியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள மறைந்த எம்.பி. ராமநாதனின் உடலுக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், மறைந்த எம்.பி. மு.இராமநாதனின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். தி.மு.க.விலே இந்தி எதிர்ப்பு போராட்டக் களத்தில் தொடங்கி, மிசா காலம் வரை அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டவர். மக்கள் பிரதிநிதியாக இருந்து பல்வேறு பணிகளை மக்களுக்கு ஆற்றியுள்ளார். தி.மு.க.வில் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவராக விளங்கியவர்.
பொதுக்கூட்டம், திருமணம், பயிற்சி கூட்டங்கள் கருத்தரங்குகளில் தி.மு.க. கொள்கைகளை 5 முதல் 6 மணி நேரம் வரையிலும் பேசும் ஆற்றல் கொண்டவர். திராவிட இயக்கத்தின் மிகப்பெரிய பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். அவருடைய மறைவு குடும்பத்திற்கு மட்டுமல்ல, தி.மு.க.விற்கும் பேரிழப்பு குடும்பத்தினருக்கும் தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், எனக் கூறினார்.
தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, சாமிநாதன், பொங்கலூர் பழனிச்சாமி உட்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.