கோவை : சூலூர் அருகே தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை : சூலூர் அருகே தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை சூலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. மேலும், வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்தல், சங்கிலி பறிப்பு சம்பவம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இந்த கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில், தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் தங்களது காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக, இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்களை போலீஸார் பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அதில், பிடிபட்டவர்கள் பல்லடத்தை சேர்ந்த மரிய ஆல்பர்ட் நெல்சன்(23), சுரேஷ்(21), வினோத்(26) ஆகியோர் எனவும், சூலூரில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் எனவும் தெரிந்தது.

இதையடுத்து, போலீஸார் மூன்று பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 20 பவுன் நகை, இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கோவை சூலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. மேலும், வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்தல், சங்கிலி பறிப்பு சம்பவம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இந்த கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில், தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் தங்களது காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக, இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்களை போலீஸார் பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அதில், பிடிபட்டவர்கள் பல்லடத்தை சேர்ந்த மரிய ஆல்பர்ட் நெல்சன்(23), சுரேஷ்(21), வினோத்(26) ஆகியோர் எனவும், சூலூரில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் எனவும் தெரிந்தது.

இதையடுத்து, போலீஸார் மூன்று பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 20 பவுன் நகை, இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.