மேட்டுப்பாளையத்தில் மின்சாரம் தாக்கி விவசாயக் கூலி தொழிலாளி உயிரிழப்பு

கோவை : மேட்டுப்பாளையம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயக் கூலி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : மேட்டுப்பாளையம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயக் கூலி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வேடர்காலனி பகுதியில் பவானி ஆற்று நீர் பாசனம் மூலம் விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தவர் சின்னதம்பி. இவர், இன்று மதியம் வாழை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக பவானி ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள பம்பு செட் பகுதிக்கு சென்று, மின் சுவிட்சை போட முயற்சித்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக, மின்சாரம் பாய்ந்து சின்னதம்பி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, அந்த வழியே வந்த அப்பகுதி மக்கள், உயிரற்ற நிலையில் மின்சார பெட்டி அருகே இருந்த சின்னதம்பியை பார்த்து மேட்டுப்பாளையம் காவல்துறைக்கும் மின்சார வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர். 

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மின்சார வாரிய ஊழியர்கள் உதவியுடன் சின்னதம்பியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...