கோவை : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட விடுதலை செய்ய வேண்டும் என மார்க்சிட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கோவை : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட விடுதலை செய்ய வேண்டும் என மார்க்சிட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கூடாது என தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த வந்த உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. ஏற்கனவே, இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அரசியல் அமர்வு தெளிவான தீர்ப்பு வழங்கிய பின்னணியில், இம்மனுவை தள்ளுபடி செய்வதாகக் கூறியுள்ளது. இந்த நிலையில், இவர்கள் விடுதலை தொடர்பாக தற்போது எந்த வழக்கும் நிலுவையில் இல்லை.
7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும், இது குறித்து ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழக அமைச்சரவை இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியும், மோடி அரசின் முட்டுக்கட்டை காரணமாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை.
எனவே, இனியும் தாமதிக்காமல் உடனடியாக கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு உரிய அழுத்தத்தை ஆளுநருக்கு தர வேண்டுமென்றும், ஆளுநரும் ஏற்கனவே தமிழக அரசு செய்த பரிந்துரையின் அடிப்படையில் இவர்களை விடுதலை செய்ய வேண்டுமென சி.பி.ஐ.(எம்) மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கூடாது என தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த வந்த உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. ஏற்கனவே, இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அரசியல் அமர்வு தெளிவான தீர்ப்பு வழங்கிய பின்னணியில், இம்மனுவை தள்ளுபடி செய்வதாகக் கூறியுள்ளது. இந்த நிலையில், இவர்கள் விடுதலை தொடர்பாக தற்போது எந்த வழக்கும் நிலுவையில் இல்லை.
7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும், இது குறித்து ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழக அமைச்சரவை இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியும், மோடி அரசின் முட்டுக்கட்டை காரணமாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை.
எனவே, இனியும் தாமதிக்காமல் உடனடியாக கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு உரிய அழுத்தத்தை ஆளுநருக்கு தர வேண்டுமென்றும், ஆளுநரும் ஏற்கனவே தமிழக அரசு செய்த பரிந்துரையின் அடிப்படையில் இவர்களை விடுதலை செய்ய வேண்டுமென சி.பி.ஐ.(எம்) மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.