நீட் தேர்வு எழுத வந்த மாணவனுக்கு காலமறிந்து உதவிய காவலர் : மாநகர காவல் ஆணையாளர் சான்றிதழ் வழங்கி பாராட்டு

கோவை : பீளமேடு அருகே உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நீட் தேர்வில் புகைப்படம் எடுப்பதற்கு ரூ. 40 இன்றி அவதிப்பட்டு வந்த மாணவனுக்கு, தக்க நேரத்தில் உதவிய காவலருக்கு கோவை மாநகர காவல் ஆணையாளர் பாராட்டுச் சான்றிதழை அளித்துள்ளார்.


கோவை : பீளமேடு அருகே உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நீட் தேர்வில் புகைப்படம் எடுப்பதற்கு ரூ. 40 இன்றி அவதிப்பட்டு வந்த மாணவனுக்கு, தக்க நேரத்தில் உதவிய காவலருக்கு கோவை மாநகர காவல் ஆணையாளர் பாராட்டுச் சான்றிதழை அளித்துள்ளார்.

கடந்த 5-ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கோவை பீளமேடு அருகே உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில், மதியம் 12.30 மணி முதல் 2 மணி வரை தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் வேகம் வேகமாக வந்தனர். இதில், ஒரு மாணவன் தேர்வு எழுத புகைப்படத்தை எடுக்காமல் வந்து விட்டார். இதனால், பதற்றமடைந்த மாணவன் தவித்துக் கொண்டிருந்த பொழுது, இதைக் கண்ட சரவணன் என்ற காவலர், புகைப்படம் எடுக்க ரூ. 40 ரூபாய் கொடுத்து உதவியுள்ளார். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்றது.



இந்த நிலையில், கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண், காலம் அறிந்து மாணவனுக்கு சரியான நேரத்தில் தேர்வு எழுத உதவிய சரவணனுக்குப் பாராட்டுக்களைக் கூறி சான்றிதழ்களை வழங்கினார். மேலும், இந்த பாராட்டு சான்றிதழ்களை வழங்கும் போது, மாநகர காவல் துணை ஆணையாளர் எல். பாலாஜி சரவணன் மற்றும் உளவுப் பிரிவு உதவி ஆணையாளர் சௌந்தரராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...