நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையினால், இயற்கைக் காண வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையினால், இயற்கைக் காண வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
உதகை, குன்னூர் மற்றும் கோத்தகிரியில் கடந்த சில நாட்களாக வெயிலுடன் கூடிய இதமான காலநிலை நிலவியது. தற்போது, கோடை சீசன் நடைபெற்று வருவதால் இந்த காலநிலையை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் தொடர்ந்து நீலகிரிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், உதகை, குன்னூர் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று பரலாக மழை பெய்து வருகிறது.

கடந்த 3 நாட்களாக மத்திய நேரங்களில் பெய்து வரும் மழையால், மழைநீர் சாலைகளில் ஓடுகிறது. இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். பலர் தங்கும் விடுதிகளிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், தற்போது பெய்து வரும் மழை, தேயிலை மற்றும் காய்கறி விவசாயத்திற்கு ஏற்றதாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.