கோவை : சூலூர் இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் நா. பழனிச்சாமிக்கு கிறிஸ்துவ மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கோவை : சூலூர் இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் நா. பழனிச்சாமிக்கு கிறிஸ்துவ மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சூலூர் சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் நா. பழனிச்சாமி போட்டியிடுகின்றார். இந்த நிலையில், சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ. வேலுவை
டி.ஈ.எல்.சி. யின் லுத்தரன் முன்னேற்ற இயக்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் டாக்டர். ஈ.டி. சார்லஸ் தலைமையில் குருமார்கள் சந்தித்து தி.மு.க. விற்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது, சூலூர் இடைத்தேர்தல் பொறுப்பாளர் எ.வ. வேலு அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

இதைத்தொடர்ந்து, டி.ஈ.எல்.சி.யின் லுத்தரன் முன்னேற்ற இயக்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தேவாலயத்தில் நடைபெற்றது. இதில், சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவிப்பது. அவர் வெற்றிபெற அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என சிறுபான்மை மக்களை கேட்டுக்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஈ.டி. சார்லஸ் கூறியதாவது :- கடந்த மே மாதம் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து அனைத்து கிறித்துவ சிறுபான்மை மக்களும் தி.மு.க.விற்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினோம். அதன்படி, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும், கிறிஸ்துவர்கள் அனைவரும் வாக்களித்தோம். அதில், தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. இந்த நிலையில், தமிழகத்தில் நடைபெற உள்ள சூலூர் உள்ளிட்ட 4 இடைத்தேர்தலிலும் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிக்க உள்ளோம்.
இதைத்தொடர்ந்து, சூலூர் சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் பொறுப்பாளர் எ.வ. வேலுவை சந்தித்து ஆதரவு தெரிவித்தோம். சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இருகூர், சூலூர், பட்டணம், சாமளாபுரம், காமநாயக்கன் பாளையம், வாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2,500-க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ வாக்காளர்கள் உள்ளனர். அனைவரும் தி.மு.க.விற்கு வாக்களிப்பார்கள், என்று கூறினார்.
சூலூர் இடைத்தேர்தல் பொறுப்பாளர் எ.வ. வேலு சந்திப்பின்போது, டி.ஈ.எல்.சி.யின் லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர். ஈ.டி. சார்லஸ், குருமார்கள் ஜெயசந்திரன், ஜெயராஜ், வில்சன், ஸ்டேன்லி மற்றும் காந்தி, ராஜேந்திரன், பாஸ்கர், திவாகர், பென்னி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
சூலூர் சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் நா. பழனிச்சாமி போட்டியிடுகின்றார். இந்த நிலையில், சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ. வேலுவை
டி.ஈ.எல்.சி. யின் லுத்தரன் முன்னேற்ற இயக்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் டாக்டர். ஈ.டி. சார்லஸ் தலைமையில் குருமார்கள் சந்தித்து தி.மு.க. விற்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது, சூலூர் இடைத்தேர்தல் பொறுப்பாளர் எ.வ. வேலு அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

இதைத்தொடர்ந்து, டி.ஈ.எல்.சி.யின் லுத்தரன் முன்னேற்ற இயக்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தேவாலயத்தில் நடைபெற்றது. இதில், சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவிப்பது. அவர் வெற்றிபெற அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என சிறுபான்மை மக்களை கேட்டுக்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஈ.டி. சார்லஸ் கூறியதாவது :- கடந்த மே மாதம் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து அனைத்து கிறித்துவ சிறுபான்மை மக்களும் தி.மு.க.விற்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினோம். அதன்படி, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும், கிறிஸ்துவர்கள் அனைவரும் வாக்களித்தோம். அதில், தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. இந்த நிலையில், தமிழகத்தில் நடைபெற உள்ள சூலூர் உள்ளிட்ட 4 இடைத்தேர்தலிலும் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிக்க உள்ளோம்.
இதைத்தொடர்ந்து, சூலூர் சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் பொறுப்பாளர் எ.வ. வேலுவை சந்தித்து ஆதரவு தெரிவித்தோம். சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இருகூர், சூலூர், பட்டணம், சாமளாபுரம், காமநாயக்கன் பாளையம், வாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2,500-க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ வாக்காளர்கள் உள்ளனர். அனைவரும் தி.மு.க.விற்கு வாக்களிப்பார்கள், என்று கூறினார்.
சூலூர் இடைத்தேர்தல் பொறுப்பாளர் எ.வ. வேலு சந்திப்பின்போது, டி.ஈ.எல்.சி.யின் லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர். ஈ.டி. சார்லஸ், குருமார்கள் ஜெயசந்திரன், ஜெயராஜ், வில்சன், ஸ்டேன்லி மற்றும் காந்தி, ராஜேந்திரன், பாஸ்கர், திவாகர், பென்னி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.