கோவை : லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தின் காசாளர் பழனிச்சாமியின் மரணம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை : லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தின் காசாளர் பழனிச்சாமியின் மரணம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காரமடை அருகே வெள்ளியங்காடு குளத்தில் கடந்த 3ம் தேதி லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தின் காசாளர் பழனிச்சாமி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது இறப்பில் மர்மம் இருப்பதாகவும், எனவே, இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது மகன் ரோகின் குமார் மனு தாக்கல் செய்தார். மேலும், பிரேத பரிசோதனை நடக்கும் போது தங்கள் தரப்பு ஆட்கள் இருக்க வேண்டும் என அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்ட போது, காசாளர் பழனிச்சாமியின் மரணம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு, பழனிச்சாமியின் உடலை கோவை அரசு மருத்துவமனையிலேயே வைத்திருக்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.