தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மே 19-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மே 19-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் 18-ம் தேதி நடந்த மக்களவை, 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவின் போது முறைகேடுகள் நடந்ததாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்தது. இதையடுத்து, 46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இதையடுத்து, வாக்குச்சாவடிகளில் நடந்த பிரச்சினை குளறுபடிகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிக்கை அளித்தார்.
இந்த நிலையில், தமிழகத்தில் மே 19-ம் தேதி 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது, தருமபுரி - 8 வாக்குச்சாவடிகளுக்கும், திருவள்ளூர், கடலூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு வாக்குச்சாடிகளிலும், தேனியில் 2 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 18-ம் தேதி நடந்த மக்களவை, 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவின் போது முறைகேடுகள் நடந்ததாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்தது. இதையடுத்து, 46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இதையடுத்து, வாக்குச்சாவடிகளில் நடந்த பிரச்சினை குளறுபடிகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிக்கை அளித்தார்.
இந்த நிலையில், தமிழகத்தில் மே 19-ம் தேதி 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது, தருமபுரி - 8 வாக்குச்சாவடிகளுக்கும், திருவள்ளூர், கடலூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு வாக்குச்சாடிகளிலும், தேனியில் 2 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.