ஆனைகட்டி அருகே காட்டு யானை தாக்கியதில் 80 வயது மூதாட்டி பலி

கோவை : ஆனைகட்டி அருகே காட்டு யானை தாக்கியதில் 80 வயது மூதாட்டி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : ஆனைகட்டி அருகே காட்டு யானை தாக்கியதில் 80 வயது மூதாட்டி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனைகட்டி அருகே உள்ள கொண்டனூர் புதூரைச் சேர்ந்தவர் என். பொன்னம்மாள் (80). இவர், தனது விவசாய நிலத்திற்கு சென்று இயற்கை உபாதையை கழித்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த காட்டு யானை பொன்னம்மாளை தாக்கியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், பொன்னம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த பொன்னம்மாள், கொண்டனூர் வனத்துறை குழுவின் தலைவர் நஞ்சனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

கொண்டனூர் புதூர் கிராமத்தில் முறையான கழிப்பறை வசதி இல்லாததால், திறந்தவெளி பகுதியில் இயற்கை உபாதைகளைக் கழிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...