10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2-வை தொடர்ந்து பிளஸ் 1-லும் 100 சதவீதம் தேர்ச்சி : அசத்தும் மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி

கோவை : பிளஸ்1 வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெருமை சேர்த்துள்ளது.


கோவை : பிளஸ்1 வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெருமை சேர்த்துள்ளது.

பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 6ம் தேதி முதல் 22ம் தேதி வரையில் நடைபெற்றது. இதில், தமிழகம், புதுச்சேரியில் 7,278 பள்ளிகளில் இருந்து 8,16,618 மாணவ, மாணவியர் மற்றும் 5,032 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8,21,650 பேர் புதிய பாடத் திட்டத்தின் கீழ் முதல் பொதுத் தேர்வினை எழுதினர். இந்தப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இதில், மொத்தம் 95 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஈரோடு மாவட்டம் 98 சதவீதம் தேர்ச்சியுடன் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில், மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 பொதுத் தேர்வில் 100% சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவ செல்வங்களுக்கும், கற்றுக் கொடுத்த ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் வாழ்த்துக்களை மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் எஸ்.பாஷா தெரிவித்துக் கொண்டார்.



இந்தக் கல்வி ஆண்டிலும் மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...