Breaking : மதுரை அரசு மருத்துவமனையில் 5 பேர் உயிரிழந்தது உண்மையே, ஆனால் ஜெனரேட்டர் பழுது காரணமல்ல : மருத்துவமனை டீன்

மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் திடீர் மின்தடை காரணமாக வென்டிலேட்டர் இயங்காததால் 5 பேர் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், மருத்துவமனையின் தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.


மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் திடீர் மின்தடை காரணமாக வென்டிலேட்டர் இயங்காததால் 5 பேர் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், மருத்துவமனையின் தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் விபத்துக்கான அவசர சிகிச்சை பிரிவு உள்ளது. நேற்று மாலை 6 மணிக்கு மதுரை மற்றும் சுற்றுப்புற பகுதியில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மின்தடை ஏற்பட்டது. பின்னர், இரண்டு மணி நேரத்திற்கு பிறகே மீண்டும் மின்சாரம் வந்தது. இந்த நிலையில், மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் உள்ள வெண்டிலேட்டர், மின் சப்ளை இல்லாததால் இயங்கவில்லை. இதனால், சிகிச்சையில் இருந்த 15 நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதில், மதுரை மாவட்டம் மேலூர் பூஞ்சுத்தி கிராமத்தை சேர்ந்த மல்லிகா (55), திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பழனியம்மாள் (60), விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரை சேர்ந்த ரவீந்திரன் (52) ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து 5 நிமிடங்களில் பலியாகினர். தொடர்ந்து, மேலும் இரு நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அவர்களது உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் கதறி அழுதபடி மருத்துவமனையை முற்றுகையிட்டு அங்கிருந்த மருத்துவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, மருத்துவமனை அதிகாரிகளின் அலட்சியப்போக்குதான் உயிரிழப்பிற்கு காரணம் என நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த மதுரை அரசு மருத்துவமனையின் தலைவர்,

“ஜெனரேட்டர் பழுதானது உண்மையே. எனினும், வென்டிலேட்டரால் உயிரிழப்பு ஏற்படவில்லை. 

தனியார் மருத்துவமனைகளில் இருந்து மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வந்திருந்தவர்கள் தான் இறந்திருக்கிறார்கள்,” என்று கூறியுள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...