கோவை : கோவையில் அக்னி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென மயங்கி விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கோவையில் அக்னி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென மயங்கி விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த 4-ம் அக்னி வெயில் தொடங்கியதால், வெயிலின் தாக்கம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால், சாலையில் செல்லும் முதியவர்கள், குழந்தைகள் என அனைவரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று பொள்ளாச்சியைச் சேர்ந்த சிறுவன் வெயிலின் தாக்கத்தில் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் அதே பகுதியில் கூலித் தொழில் செய்து வருகிறார். குணசேகரனின் மகன் சிவகார்த்திகேயன் (15) ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது விடப்பட்டுள்ள தேர்வு விடுமுறை நாட்களை கழிப்பதற்காக கோவை பேரூர் செட்டிபாளையத்தில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில், வெயிலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சிறுவனை உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெயிலின் தாக்கத்திற்கு 15 வயது சிறுவன் பலியான சம்பவம் கோவை மாவட்டத்தில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த 4-ம் அக்னி வெயில் தொடங்கியதால், வெயிலின் தாக்கம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால், சாலையில் செல்லும் முதியவர்கள், குழந்தைகள் என அனைவரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று பொள்ளாச்சியைச் சேர்ந்த சிறுவன் வெயிலின் தாக்கத்தில் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் அதே பகுதியில் கூலித் தொழில் செய்து வருகிறார். குணசேகரனின் மகன் சிவகார்த்திகேயன் (15) ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது விடப்பட்டுள்ள தேர்வு விடுமுறை நாட்களை கழிப்பதற்காக கோவை பேரூர் செட்டிபாளையத்தில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில், வெயிலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சிறுவனை உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெயிலின் தாக்கத்திற்கு 15 வயது சிறுவன் பலியான சம்பவம் கோவை மாவட்டத்தில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.