ஆதரவற்றோர்க்கு ஆதரவு அளிக்கும் வகையில் பிரம்மாண்ட கேக்!

கோவை: பேக்கரி செயின் ஆன் தி பிரெஞ்ச் லோஃப் நிறுவனம் கோவையில் புரூக் பீல்ட் மாலில் முதல் முறையாக 600 கிலோ எடையுள்ள மிக நீளமான போட்டோ கேக் தயாரித்து சாதனை படைத்துள்ளது. ஓரியண்டல் குசீன்ஸ் பிரைவேட் லிமிடெட் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் மகாதேவன் மற்றும் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரெனால்டு பெர்னாண்டஸ் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ் மற்றும் அவருடைய மகள் சரண்யா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் கலந்து கொண்டு இசைநிகழ்ச்சி நிகழ்த்தினர். இசை நிகழ்ச்சியை பொதுமக்களை அனைவரும் கவர்ந்தது. 





நிகழ்ச்சியில், டீன் பவுண்டேஷன் மற்றும் சங்கர கண் மருத்துவமனை ஆகியவற்றிற்கு ஆதரவாக நடத்தப்பட்ட 'டான் உதச்வ்' ன் ஒரு பகுதியாக 60 மீட்டர் நீளமும், 600 கிலோ எடையுள்ள கேக் தயாரிக்கப்பட்டு, இசை உலகில் தென்னிந்தியாவின் பிரபலம் மற்றும் ஜாம்பவான்களின் நினைவாக இக்கேக் அர்பணிக்கப்பட்டது.





இதில் 600க்கும் மேற்பட்ட ஜாம்பவான்களின் புகைப்படங்களை கொண்டு இந்த கேக் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த கேக்கின் மூலம் வசூலாகும் பணத்தை தனிநபரின் மருத்துவ உதவிக்கும் மற்றும் நலிந்த பிரிவை சேர்ந்த குழந்தைகளின் கல்விக்கும், ஆதரவு அளித்து வரும் டீன் பவுண்டேசன் மற்றும் சங்கர கண் மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்படும்.

Newsletter

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...