தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை : தமிழகம் முழுவதும் பல்வேறு தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளியை, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

கோவை : தமிழகம் முழுவதும் பல்வேறு தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளியை, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

ஜி.என். மில்ஸ் அருகே உள்ள அருள் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர், கட்டிட கான்டிராக்ட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், இவரது வீட்டில் வேலைக்கார பெண்ணான சத்தியபாமா கடந்த ஏப்ரல் 3-ம் தேதி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக திடீரென வீட்டுக்குள் புகுந்த இரு மர்ம நபர்கள் சத்தியபாமாவை தாக்கி விட்டு, வீட்டில் இருந்த 35 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதையடுத்து, மருதமலை அருகே உள்ள வடவள்ளி பகுதியில் வசித்து வரும் தங்கராஜ் என்பவரை இந்த கொள்ளை வழக்கில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதில், தங்கராஜுக்கு தமிழகம் முழுவதும் கொள்ளை வழக்குகளில் தொடர்பிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த தங்கராஜ் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாரின் உத்தரவின் பேரில், குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பரிந்துரை செய்யப்பட்டது. இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...