கோவை : மேட்டுப்பாளையத்தில் சூறாவளிக்காற்றில் சிக்கி ஜம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்ததால், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை : மேட்டுப்பாளையத்தில் சூறாவளிக்காற்றில் சிக்கி ஜம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்ததால், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சிறுமுகை, பகத்தூர், அன்னதாசம்பாளையம், இடுகம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது. கிணற்று நீர் பசனங்கள் மூலம் இந்த கிராமங்களில் பூவன், நேர்ந்திரன், கதிளி உள்ளிட்ட வாழை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று இரவு இந்த பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் புரட்டியெடுத்த இந்த சூறாவளியில் சிக்கி சுமார் 50-000த்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமானது.

நன்கு வளர்ந்த ஓரிரு மாதங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் நாசமானதால், ஒவ்வொரு விவசாயிக்கும் பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கும் பாதிக்கப்பட்ட விவசாயிகள், ஏற்கனவே வங்கிகள் மூலம் கடன் பெற்றே விவசாயம் செய்து வந்த நிலையில், தற்போது ஏற்பட்ட இந்த சூறாவளிக்காற்றால் தங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாக மாறியுள்ளதாக வேதனை தெரிவித்தனர். மேலும், சூறாவளிக்காற்றால் சேதமடைந்த வாழைகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சிறுமுகை, பகத்தூர், அன்னதாசம்பாளையம், இடுகம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது. கிணற்று நீர் பசனங்கள் மூலம் இந்த கிராமங்களில் பூவன், நேர்ந்திரன், கதிளி உள்ளிட்ட வாழை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று இரவு இந்த பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் புரட்டியெடுத்த இந்த சூறாவளியில் சிக்கி சுமார் 50-000த்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமானது.

நன்கு வளர்ந்த ஓரிரு மாதங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் நாசமானதால், ஒவ்வொரு விவசாயிக்கும் பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கும் பாதிக்கப்பட்ட விவசாயிகள், ஏற்கனவே வங்கிகள் மூலம் கடன் பெற்றே விவசாயம் செய்து வந்த நிலையில், தற்போது ஏற்பட்ட இந்த சூறாவளிக்காற்றால் தங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாக மாறியுள்ளதாக வேதனை தெரிவித்தனர். மேலும், சூறாவளிக்காற்றால் சேதமடைந்த வாழைகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.