ரமலான் நோன்பு இன்று தொடங்கியது : மசூதிகளில் சிறப்பு தொழுகை

கோவை : ரமலான் நோன்பு இன்று தொடங்கியதையடுத்து, இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை : ரமலான் நோன்பு இன்று தொடங்கியதையடுத்து, இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான், ஈகைத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. 

‘ரமலான்’ என்ற அரபுச்சொல்லிற்கு ‘கரித்தல்’, ‘எரித்தல்’, ‘பொசுக்குதல்’ என பல பொருள்கள் உண்டு. இஸ்லாம் மார்க்கத்தின் ஐந்து கடமைகளில் 3-வது கடமையாக ரமலான் உள்ளது. ரமலான் மாதம் என்பது இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும். மேலும், ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகளை அதிகம் செய்யும் மாதம், கடவுளை நெருங்கும் வாய்ப்பைப் பெறும் மாதம் என நம்பப்படுகிறது. இந்த ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் அதிகாலை முதல் மாலை வரை உண்ணா நோன்பு கடைபிடிக்கின்றனர்.

நோன்பு என்பது உணவை உண்ணாமல் இருப்பதோடு நீரருந்தாமல், புகைக்காமல், மற்றும் வேறு தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பதாகும். நோன்பு இருக்கும் நபர் அதிகாலை 4.30 மணிக்கு முன்னர் சாப்பிட வேண்டும். நோன்பு திறப்பதற்கான நிய்யத்தை கூறி நோன்பை திறக்க வேண்டும். மாலை நோன்பை திறந்து உணவை எடுத்துக் கொள்ளலாம். 30 நாட்களும் நோன்பு கடைபிடிக்கப்படுவதுடன், நாள்தோறும் 5 வேளை தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். 

நேற்று பிறை தெரிந்ததை அடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரமலான் நோன்பு இன்று தொடங்குவதாக அரசு தலைமை காஜி அறிவித்தார்.

இதையடுத்து, இஸ்லாமியர்கள் நேற்று இரவு திராவிஹ் தொழுகையில் தொடங்கி, இன்று அதிகாலையில் சஹர் செய்தனர். 30 நாட்கள் நோன்பு முடிந்த பின்னர், தங்களின் உறவினர்கள், நண்பர்களுடன் சிறப்பாக விருந்து படைத்து ரமலான் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் ஜூன் மாதம் 4ம் தேதி (செவ்வாய்கிழமை) ரமலான் கொண்டாடப்படுகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...