Breaking: வருமான வரித்துறை சோதனையில் கோடி கோடியாக சிக்கியதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை : மார்ட்டின் நிறுவனம் அறிக்கை

கோவை : வருமான வரித்துறை சோதனையில் கோடி, கோடியாக ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள்களில் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக மார்ட்டின் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


கோவை : வருமான வரித்துறை சோதனையில் கோடி, கோடியாக ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள்களில் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக மார்ட்டின் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் மார்ட்டின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : நாடு முழுவதும் உள்ள எங்கள் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் கடந்த 3-ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 3-ம் தேதி முதல் 4-ம் தேதி இரவு வரை இந்த சோதனை நடைபெற்றது. அதில், கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள எங்களது வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட தொகையின் மதிப்பு ரூ. 98,820 ஆகும். இதற்கான சட்டப்பூர்வ கைப்பற்றுதல் படிவமானது, வருமான வரித்துறையின் உதவி இயக்குநரால் முத்திரையிடப்பட்டு கையொப்பமிட்டு கொடுக்கப்பட்டுள்ளது. 



இந்த நிலையில், 2 நாட்கள் கோவையில் உள்ள எங்களது வீட்டினுள் கட்டிலுக்கு அடியிலும், பாதாள அறைகளிலும் இருந்து கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் கைப்பற்றப்பட்டதாகத் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் தவறான செய்திகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த காணொளியின் புகைப்படங்கள் சில செய்தித் தாள்களிலும் வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் உள்ளவாறு எந்தவொரு நிகழ்வும் எங்களது வீட்டில் நடைபெறவில்லை. மேலும், அதில் காண்பிக்கப்பட்டவாறு எந்தவொரு அறையோ, கட்டிலோ மற்றும் படிக்கட்டுகளோ எங்கள் வீட்டில் இல்லை. அந்த செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. அந்த காணொளிக்கும், எங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று நான் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன், என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...