நீலகிரி : மேட்டுப்பாளையம் - நீலகிரி மலைப்பாதையில் சுற்றுலாப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ராஜபாளையத்தை சேர்ந்த 22 பேர் படுகாயம் அடைந்தனர்.
நீலகிரி : மேட்டுப்பாளையம் - நீலகிரி மலைப்பாதையில் சுற்றுலாப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ராஜபாளையத்தை சேர்ந்த 22 பேர் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த 30 பேர் நீலகிரி மாவட்டம் உதகைக்கு நேற்று சுற்றுலா வந்துள்ளனர். பின்னர், இன்று மதியம் உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர். பேருந்தினை ராஜபாளையத்தைச் சேர்ந்த முத்துராஜ் (44) என்பவர் ஒட்டி வந்தார். மாலை மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு 2-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 10 அடி பள்ளத்தில் விழுந்தது.

இந்த சம்பவம் குறித்து அந்த சாலை வழியே சென்றவர்கள் மேட்டுப்பாளையம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற மேட்டுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர்கள், தனிப்பிரிவு தலைமை காவலர்கள், தலைமை காவலர் ஆகியோர் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதில், பேருந்தில் பயணித்த ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என 22 பேர் காயமடைந்தனர். மேலும், படுகாயமடைந்து மோசமான நிலையில் இருந்த 5 பேர் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மேட்டுப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த 30 பேர் நீலகிரி மாவட்டம் உதகைக்கு நேற்று சுற்றுலா வந்துள்ளனர். பின்னர், இன்று மதியம் உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர். பேருந்தினை ராஜபாளையத்தைச் சேர்ந்த முத்துராஜ் (44) என்பவர் ஒட்டி வந்தார். மாலை மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு 2-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 10 அடி பள்ளத்தில் விழுந்தது.

இந்த சம்பவம் குறித்து அந்த சாலை வழியே சென்றவர்கள் மேட்டுப்பாளையம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற மேட்டுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர்கள், தனிப்பிரிவு தலைமை காவலர்கள், தலைமை காவலர் ஆகியோர் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதில், பேருந்தில் பயணித்த ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என 22 பேர் காயமடைந்தனர். மேலும், படுகாயமடைந்து மோசமான நிலையில் இருந்த 5 பேர் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மேட்டுப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.