கோவை : சூலூர் இடைத்தேர்தலில் பார்வையற்ற வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக, பிரெய்லி தாள்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
கோவை : சூலூர் இடைத்தேர்தலில் பார்வையற்ற வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக, பிரெய்லி தாள்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்காக 324 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் 100 சதவீத வாக்குகள் பதிவாக வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மாற்றுத் திறனாளிகளும் தவறாமல் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், பார்வையற்றவர்களும் வாக்களிக்கும் வகையில், பிரெய்லி தாள்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
324 வாக்குச்சாவடி மையங்களுக்கு மொத்தம் 356 பிரெய்லி தாள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கு முந்தைய தினம் இந்தத் தாள்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்காக 324 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் 100 சதவீத வாக்குகள் பதிவாக வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மாற்றுத் திறனாளிகளும் தவறாமல் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், பார்வையற்றவர்களும் வாக்களிக்கும் வகையில், பிரெய்லி தாள்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
324 வாக்குச்சாவடி மையங்களுக்கு மொத்தம் 356 பிரெய்லி தாள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கு முந்தைய தினம் இந்தத் தாள்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.