நீலகிரி : உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர் மழையினால், இயற்கையின் அழகை காண முடியாமல் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
நீலகிரி : உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர் மழையினால், இயற்கையின் அழகை காண முடியாமல் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
உதகையில் கடந்த சில நாட்களாக வெயிலுடன் கூடிய இதமான காலநிலை நிலவியது. தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளதால், இந்த கால நிலையை அனுபவிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு படையெடுத்துள்ளனர். நேற்று முதல் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு, பிற்பகல் லேசான மழை பெய்தது. இந்த நிலையில், இன்று உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில், பிற்பகல் முதல் கனமழை பெய்து வருகிறது.
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் கரம் புரண்டு ஓடுகிறது. மேலும், பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் ஓடுவதால் பாதசாரிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

மேலும், வெளியூர்களில் இருந்து நீலகிரியின் எழில் கொஞ்சும் இயற்கை அழகை காண வந்த சுற்றுலாப் பயணிகள், இந்த மழையினால் ஆங்காங்கே தேங்கி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இது ஒருபுறம் இருக்க, தற்போது பெய்து வரும் மழையினால், கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருக்காது என உள்ளூர் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
உதகையில் கடந்த சில நாட்களாக வெயிலுடன் கூடிய இதமான காலநிலை நிலவியது. தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளதால், இந்த கால நிலையை அனுபவிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு படையெடுத்துள்ளனர். நேற்று முதல் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு, பிற்பகல் லேசான மழை பெய்தது. இந்த நிலையில், இன்று உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில், பிற்பகல் முதல் கனமழை பெய்து வருகிறது.
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் கரம் புரண்டு ஓடுகிறது. மேலும், பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் ஓடுவதால் பாதசாரிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

மேலும், வெளியூர்களில் இருந்து நீலகிரியின் எழில் கொஞ்சும் இயற்கை அழகை காண வந்த சுற்றுலாப் பயணிகள், இந்த மழையினால் ஆங்காங்கே தேங்கி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இது ஒருபுறம் இருக்க, தற்போது பெய்து வரும் மழையினால், கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருக்காது என உள்ளூர் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.